20 நவம்பர், 2010

இந்த யுவதியை உங்களுக் தெரியுமா?






வன்னியில் இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்ட யுவதி ஒருவர் தற்போது பூந்தோட்டம் பொலி ஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

21 வயதான விஜயகுமாரி அல்லது செந்தில் குமாரி என்ற பெயருடைய இவரின் தந்தையார் ரமேஷ் என்றும் தாயார் ராஜலக்ஷ்மி என்றும் தெரிவித்தார். நுவரெலியா லபுசிகலே பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரிடம் இவர் தெரிவித்துள்ளார்.

படத்தில் காணப்படும் இவரின் தாய், தந்தையர் அல்லது உறவினர்கள் பூந்தோட்டம் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறும் இவரை அழைத்துச் செல்லுமாறும் பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.

தனது வதிவிடத்தை சரியாக குறிப்பிட்டு கூற முடியாத நிலைமையில் இவர் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக