20 நவம்பர், 2010

புனித மக்காவில் இலங்கையர் ஐவர் மரணம்

இலங்கையிலிருந்து இம்முறை புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.

இம்மரணங்கள் இயற்கையானவை எனவும் அவ்வமைச்சு தெரிவிக்கின்றது.

இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறையைச் சேர்ந்த இருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளனர்.

மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.

அடையாளங் காணப்பட்ட பின்னர் ஜனாஸாக்களை கூடிய விரைவில் இலங்கை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவ்வமைச்சு தெரிவிக்கின்றது.

ஏற்கனவே காத்தான்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்து, அவரது ஜனாஸா அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக