20 நவம்பர், 2010

வடக்கில் மக்களிடம் அதிகாரங்களை ஒப்படைப்பதே எமது எதிர்பார்ப்பு’ ஜனாதிபதி






வடக்கு மக்கள் மாகாண சபைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பம் வழங்குவதோடு அதனூடாக அதிகாரங்களை மக்கள் கைகளிலேயே ஒப்படைப்பதே தமது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் முன்னொருபோது மில்லாதவாறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அங்கு இடம்பெறும் ஒவ் வொரு அபிவிருத்தியும் பயங்கரவாதத்திற் கான வழிகளை மூடும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு நேற்று காலி முகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகக் கட்டிட முன்றலில் நடைபெற்றது. பிரதமர் டி.எம். ஜயரட்ன, சிரேஷ்ட அமைச் சர்கள், மதத் தலைவர்கள், ராஜதந்திரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற் றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தமதுரையில் மேலும் தெரிவித்த தாவது; ஐந்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் என்னிடம் ஒப்படைத்த நாட்டை விட சிறந்த நாடொன்றிலேயே தற்போது நீங்கள் வாழ்கின்ஹர்கள் என்பது உண்மை.

வழங்கப்பட்ட பொறுப்பினை நிறை வேற்றி முன்பிருந்ததை விட சிறப்பான நாட்டைக் கட்டியெழுப்பிய பின் மக்கள் முன் உரையாற்றும் தலைவன் நான் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த 2005 நவம்பர் 19ம் திகதி நான் பதவியேற்று நாட்டைப் பொறுப்பேற்றபோது இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது.

இரவு பகல் எனப் பாராமல் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் நான் செயற்பட்டமை சகலரும் அறிந்ததே.

அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் மே 19ம் திகதி பயங்கரவாதத்தை வென்று உலகின் பாராட்டைப் பெற்றுக்கொண்ட துடன் நாட்டை ஒன்றிணைத்தோம்.

இன்று நவம்பர் 19ம் திகதி எமது தாய் நாட்டை உலகின் முன்னிலையில் இலங் கையை உன்னத நாடாக உயர்த்துவதற்கான எதிர்பார்ப்புடனேயே பொறுப்பேற்கிறேன். 2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை கொள் கைத் திட்டத்தை முன்வைத்து அதன் மூலம் நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தினோம். இன்று முதல் மஹிந்த சிந்தனையின் எதிர் காலத் திட்டம் ஆரம்பமாவதுடன் அதன் மூலம் உலகின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு. 2005 ல் இருந்தது போன்று பன்மடங்கு பலம் தன்னம்பிக்கையுடனேயே இம்முறை நாம் நாட்டைப் பொறுப்பேற்றுள்ளோம்.

நம்மில் பெரும்பாலானோர் தெற்கில் இரண்டு கிளர்ச்சியையும் வடக்கில் 30 வருட பிரிவினைவாதத்தையும் கண்டுணர்ந் தவர்கள். பிரிவினைவாதத்தைப் போன்றே கிளர்ச்சியின் மூலமும் நமது தாய்நாடு உலகப் படத்தில் அடிமட்டத்திற்கு வீழ்ச்சி யுற்றமையை நாம் கண்டுள்ளோம்.

இதனால் இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் நாடு மீண்டும் இரத்த ஆற்றில் மிதப்பதைத் தடுக்கவும் உலகின் முன்னி லையில் நாம் தனித்துவமாக எழுந்து நிற்கவும் வழிவகை செய்வதே எமது முதன்மையான நடவடிக்கையாகவேண்டும்.

அதற்காக எமது தாய் நாட்டில் இனங் களுக்கிடையிலான சமத்துவம் சமாதானம் நிலைப்பதற்கு வழி செய்வது அவசியம். அதனால்தான் நாட்டின் மக்கள் தொகையில் நூற்றுக்கு 80 வீதம் வாழும் கிராமப் பிரதேசங்களை முன்னேற்றுவதற்கு மஹிந்த சிந்தனை மூலம் தீர்மானித்தோம்.

இதனால் கொழும்பிற்கு வெளியே நகரங்கள் கிராமங்களில் கவிழ்ந்திருந்த இருள் நீங்கி ஒளியேற்பட்டுள்ளது. ஐந்து துறைமுகங்கள் ஏற்படுத்தப்பட்டதும் இத்தகைய பகுதிகள் உயர் பொருளாதார வலயங்களாக மாற்றம்பெறுவது உறுதி.

பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்கும் போது இன்னும் பல நகரங்கள் கட்டி யெழுப்பப்படும். இதன் மூலம் வர்த்தகம் வேலை வாய்ப்புத்துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும். பயங்கரவாதத் திடமிருந்து மீட்கப்பட்ட நாடு 2012 இறுதிக்குள் இருளிலிருந்து மீட்கப்பட்ட நாடாக ஒளிபெறும்.

அது மட்டுமன்றி எமது மின்சாரத் திட்டங்களின் மூலம் நாட்டின் சகல குடும்பங்களும் ஒளிபெறுவதும் உறுதி

எம்முன் உள்ள எதிர்காலமானது நாட்டிற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டிய காலமாகும். பயனுள்ளதாகவும் வருமான மீட்டுவதாகவும் நாட்டை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பு.

எமக்கு எமது இளைய தலைமுறை யினரின் மீது அதீத நம்பிக்கையுள்ளது. எமது இளைஞர்கள் முப்படைகளிலும் இணைந்து உலகம் பாராட்டும் வெற்றியை ஈட்டித் தந்தமையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எமது எதிர்கால சந்ததியினர் முன்மொழி யிலும் கற்றுத் தேர்ந்து தொழில்நுட்ப ரீதியில் 75 வீதமாக முன்னேற்றமடைவதையே நாம் எதிர்பார்ப்பாகக் கொண்டுள்ளோம். நாம் இந்த நாட்டை அறிவின் கேந்திரமாக் கும்போதுஅவர்கள் அத்தகைய நிலையை எட்ட முடியும் என்பதே எமது நம்பிக்கை.

எமது நாட்டின் பிரச்சினைகளை இனங்காணவும் அதனைத் தீர்க்கவும் போதிய தெளிவு எம்மிடமுண்டு. இலங்கை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் ஒரு மாதிரி அல்ல. எந்தவொரு கருத்தை தெரிவிப்பதற்கும் தீர்மானங்களை எடுப்பதற்கும் உரித்துடையவர்கள்.

எமது நாட்டுக்குச் சாதகமான தீர்வையே நாம் தேடுவோம். பயங்கரவாதிகளினது எதிர்பார்ப்பும் மக்களுடைய எதிர்பார்ப்பும் ஒன்றல்ல என்பதை நாம் அறிவோம். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத செயற் திட்டங்களை நாம் வடக்கு கிழக்கில் மேற்கொண்டுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சகல அபிவிருத்திகளும் பயங்கரவாதத்திற்கான வழிகளை இல்லாதொழிப்பது உறுதி. வறுமையை ஒழிப்பதும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதும் அரசியல் தீர்வின் பாரிய பகுதியாகும் என்பதே எனது நம்பிக்கை.

வடக்கு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களித்துள்ளார்கள். பொதுத் தேர்தலில் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எதிர்காலத்தின் உள்ளூராட்சி சபைகளுக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் கைகளிலேயே அதிகாரங்களை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது வெளிநாட்டுக் கொள்கையானது பிளவுபடாத கொள்கையாகும். கடந்த யுகத்தில் தேசிய பாதுகாப்புக்காக நாம் பல நாடுகளுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டோம். தற்போது உருவாகியுள்ள அபிவிருத்தி யுகத்தில் அதற்காக 1திங்ழி ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளுடன் நட்புக்கரம் நீட்டுவோம்.

சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லை. அதனால் தேசிய பாதுகாப்புக்காக நட்புறவு கொண்ட நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக்கொண்டு புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

கஷ்டமான விடயங்கள் என கைவிடுவது எமது கலாசாரமல்ல. நாட்டை மீட்பது மட்டுமன்றி தற்காலத்தில் இந்த சமூகம் மீள முடியாது என சிலர் நினைக்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நாம் பின்னிற்கப்போவதில்லை.

கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலிலும் தொகுதி வாரியாக வேறு எந்த நாடும் எட்ட முடியாத வெற்றியை நாம் பெற்றுள்ளோம். பாதாள உலகமற்ற சட்டவிரோத செயல்களற்ற, கப்பம், ஆயுதப் பரிமாற்றமற்ற நாட்டை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு.

எதிர்கால வெற்றிகளின் முக்கிய பங்காளிகளாக இந்நாட்டுப் பிரஜைகள் அனைவரும் திகழவேண்டும் என்பதே எமது அவா. அதற்காக இன, மத, குல, அரசியல், கட்சி பேதமின்றி எம்முடன் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

இந்நாட்டை உயர்ந்த இடத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் என்னை உயர்த்துவதற்கு வேறு இடமில்லை. எனது தாய்நாடு அன்றி உயர்ந்தது என்று எனக்கு எதுவுமில்லை.

நான் ஓய்வு பெற்ற நாளில் மெதமுலன வீட்டிலேயே இருப்பேன். அந்நாட்களில் இந்த நாட்டின் பிரஜையொருவர் என்னை வந்து பார்த்து ‘நீங்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியுள்ழர்கள்’ என பெருமையுடன் கூறினால் அதுவே எனக்கு பெரும் திருப்தி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக