18 ஆகஸ்ட், 2010

கொழும்பு - தூத்துக்குடி; தலைமன்னார் - ராமேஸ்வரம்:

கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்க இலங்கை, இந்திய அரசுகள் நடவடிக்கை

தென்பகுதி ரயில்பாதை புனரமைப்பு ஒக்டோபரில்


கொழும்பு - தூத்துக்குடி மற்றும் தலைமன்னார் - ராமேஸ்வரத்துக்கான கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான முன்னோடி நடவடிக்கைகளை இலங்கை, இந்திய அரசாங்கங்கள் மேற்கொண்டு வருவதாக இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.

அத்துடன் தென்பகுதி ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகளை ஒக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர் இதற்கென 167.4 மில். அமெரிக்கன் டொலர்களை நிதியுதவியாக இந்தியா வழங்கவுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை புனரமைப்பு தொடர்பான உடன்படிக்கைக் கைச்சாத்து நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக