18 ஆகஸ்ட், 2010

சென்னை நீதிமன்றத்தில் 6 இலங்கையருக்கு சிறை

விடுதலைபுலிகளின் அனுசரணை வழங்கியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேருக்கு சென்னை, தாம்பரம் நீதிமன்றம் ஒரு வருட சிறைத் தண்டைனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2007 ஆம் ஆண்டு இவர்கள் 'கியூ' பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யபட்டனர். இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து சென்னை உயர் நீதி மன்றம் இந்தத் தீர்ப்பினை வாங்கியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தம்பியண்ணா, சென்ஜேம்ஸ், ஜெயக்குமார், புஷ்பதன்ராஜ், பூமிநாதன், ரவிக்குமார் ஆகியோருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இவர்கள் 2007 ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு ஒன்றில் இலங்கைக்கு செல்ல முயன்ற போதே அவர்கள் 'கியூ' பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக