6 ஜூன், 2010

இம்மாதம் யசூசி அகாஸி இலங்கை வருகை



ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஸி இம்மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அகாஸி ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அகாஸி, இலங்கையின் முக்கிய ராஜதந்திரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யசூசி அகாசி கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறுதியாக இலங்கைக்கு விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக