11 நவம்பர், 2010

போரில் பாதிக்கப்பட்ட இலங்கை வடபகுதிக்கு பி.பி.சி. நிருபர்கள் செல்ல தடை


இலங்கையில் போரின் போது ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கமிஷன் போர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுபற்றி செய்தி சேகரிக்க இங்கிலாந்து பி.பி.சி. நிருபர்கள் குழு ஒன்று இலங்கை வந்திருந்தது. அவர்கள் விசாரணை கமிஷன் விசாரிக்கும் வட பகுதிகளுக்கு செல்ல முற்பட்டனர்.

ஆனால் அவர்களுக்கு இலங்கை ராணுவ துறை அனுமதி மறுத்துவிட்டது.
போர் காலங்களில் ராணுவத்திடம் அனுமதி பெற்று விட்டுதான் வடபகுதிகளுக்கு செல்ல முடியும். தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்ட போதிலும் இன்னும் ராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருக்கிறது.

வட பகுதிக்கு செல்ல அனுமதி கிடைக்காததால் பி.பி.சி. நிருபர்கள் குழு கொழும்பு நகரிலேயே முடங்கி கிடக்கிறது. 2 மாதத்துக்கும் முன்பும் இதே போல பி.பி.சி. நிருபர்கள் குழு வடபகுதிக்கு செல்ல முயற்சித்தது. அப்போதும் அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக