11 நவம்பர், 2010

இந்தியாவுக்கு ஒபாமா ஆதரவு: பாகிஸ்தான் கடும் அதிருப்தி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர அந்தஸ்து பெற அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளதற்கு பாகிஸ்தான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாதில் புதன்கிழமை அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸக்ஷ் கிலானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர அந்தஸ்து பெற தங்களது முழு ஆதரவு உண்டு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அவர் கூறியதால் மட்டுமே இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து கிடைத்துவிடாது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் செüத்ரி அஹமத் முக்தார் கூறினார்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர அந்தஸ்தை எட்டிப்பிடிப்பதென்பது இந்தியாவுக்கு எளிதான விஷயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

""ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர அந்தஸ்தைப் பெற பல்வேறு நாடுகள் போட்டா போட்டி போடுகின்றன. இந்தியா நிரந்தர அந்தஸ்தைப் பெற இப்போது உலகில் நிலவும் சூழல் இடம் கொடுக்காது. ஒபாமா நிர்வாகம் கூறியதால் மட்டுமே இந்தியாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர அந்தஸ்து கிடைத்துவிடாது'' என்று அந்நாட்டின் கல்வித் துறை அமைச்சர் சர்தார் ஆசிப் அகமது அலி கூறினார்.

பயங்கரவாதிகளால் இந்தியாவைவிட பாகிஸ்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானும் இந்தியாவும் கைகோத்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் செüத்ரி அஹமத் தெரிவித்தார்.

மும்பை தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானும் பயங்கரவாதிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஒபாமாவே கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக