11 நவம்பர், 2010

இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு போலாந்தில் கண்டெடுப்பு





வார்சா: இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத வெடிகுண்டு போலாந்து நாட்டின் தலைநகர் வார்சா சர்வதேச விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டு்ள்ளது. இரண்டாம் உலகப்போர் கடந்த 1939-ம் ஆண்டு தொடங்கி 1945-ல் முடிவுற்றது. அப்போது நேசப்படைகள் பிரிவில் போலாந்து இடம்பெற்றிருந்தது. போலாந்து நாட்டின் தலைநகரமான வார்சா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் விமான நிலையத்தினை இணைக்கும் ரயில் நிலையம் அமைக்க கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்த போது போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில் கண்டுபிடிக்கப்பட்ட‌ வெடிகுண்டினை தகுந்த வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்களை கொண்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இத்தகைய குண்டுகள் போலாந்து மட்டுமின்றி ‌ஜெர்மன், உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளி்ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது வழக்கமான ஒன்று தான் என விமான நிலைய போக்குவரத்து போலீஸ் ஒருவர் கூறினார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக