16 நவம்பர், 2010

ஜே.வி.பியின் ஆர்ப்பாட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் பொது மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால் நேற்று ஜே. வி. பியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் பொது மக்களால் குழப்பப்பட்டது.

ஜே. வி. பி.யின் ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

நேற்றுப் பிற்பகல் 1.30 மணிக்கு யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் பொதுமக்கள் தக்காலி மற்றும் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தைக் குழப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, செயலாளர் ரில்வின் சில்வா, கட்சி முக்கியஸ்தரான சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மனிதாபிமான இராணுவ நடவடிக் கையின் போது கைது செய்யப்பட்டு சிறை யில் வைக்கப்பட்டிருப்பவர்கள் எனக் கூறப்படுபவர்களை விடுவிக்கும்படி அரசைக்கோரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஜே. வி. பி யினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக