18 நவம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்






ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று யாழ். மாவட்டத்தில் பல்வேறுபட்ட விசேட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

நேற்று முற்பகல் யாழ் நகரிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் மாவட்ட இணைப்பாளர் கலாநிதி வீ. தங்கராஜா தலைமையில் இடம்பெற்ற பிறந்த தின கொண்டாட்டத்தில் சம்பிரதாய முறைப்படி பிறந்தநாள் கேக் வெட்டப் பட்டது. யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம், யாழ். ஆஸ்பத்திரி வீதி புனித மரியாள் தேவாலயம், யாழ். நகர் ‘ நாகவிகாரை மற்றும் யாழ். நகரில் உள்ள பள்ளிவாசல் என்பவற்றில் ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

மேலும், கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோருக்கும் கைதடிப் பகுதியில் வாழும் வறிய மக்களுக்கும் ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், கரவெட்டி, குருநகர் பிரதேசங்களில் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டது.

யாழ். நகரில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பிறந்த தின நிகழ்வுகளில் பங்குகொண்டோருக்கு ஜனாதிபதியின் உருவப் படங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக