18 நவம்பர், 2010

இலங்கை தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி திருப்திகரமாக இல்லை: ரணில்



இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி திருப்திகரமாக இல்லை என்று எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை சென்ற போது ஊடகவியலாளர்கிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

இங்க தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சொந்த விடயமாக சென்னை வந்துள்ளேன். இன்று ஒரு நாள் இங்கு தங்குகிறேன். அப்போது, சிலரை சந்தித்து பேச உள்ளேன்.

கேள்வி : இலங்கையில் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி எந்த அளவுக்கு நடை பெறுகின்றது?

அந்த பணி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை. நேற்று கூட நானும், இலங்கை தமிழ் எம்பி சம்பந்தமும் இது சம்பந்தமாக கலந்து பேசினோம்.

அடுத்த வாரம் மீண்டும் பேசுகிறோம். அதன் பின்பு இலங்கை பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத் தொடரில் இந்த பிரச்னையை எழுப்ப இருக்கிறோம். இலங்கையில் நடப்பது எதுவுமே சரியாக இல்லை. கேள்வி : ஜனாதிபதியின் செயல்பாடுகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ஜனாதிபதி தன்னிச்சையாக செயல்படுகிறார். எந்த பிரச்னை என்றாலும் தன்னுடைய ஆதரவாளர்களை மட்டுமே கலந்து பேசுகிறார். நாட்டின் பொதுப் பிரச்னைகளில் எதிர்கட்சிகளை கலந்து பேச வேண்டும் என்ற மரபு உள்ளது. ஆனால், ஜனாதிபதி அந்த மரபுகளை மீறி செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளாகிய எங்களை மதிப்பது இல்லை. எந்த தகவலையும் சொல்வதும் இல்லை. இவ்வாறு ரனில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக