18 நவம்பர், 2010

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் அச்சமின்றி முதலீடு செய்யலாம் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்


யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இந்திய அரசின் உதவியுடனும் இலங்கை அரசின் உதவியுடனும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் 176 மில்லியன் இந்தியன் ரூபாய் உதவி மற்றும் இலங்கை அரசின் 25 மில்லியன் ரூபாய் உதவி இதற்காக கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைத்தொழில் பேட்டையில் முதலீடு செய்யவுள்ள முதலீட்டாளர்களுக்கான அபிவிருத்தி கூட்டமும் காணி பகிர்வுக் கூட்டமும் பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அமைச்சின் யாழ். காரியாலயத்தில் இடம் பெற்றது.

கைத்தொழில் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி அறிமுகவுரை நிகழ்த்தினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்:- அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் முதலீட்டாளர்கள் எவ்வித பயமும் கொள்ளதேவையில்லை.

அதற்கான வள ஒதுக்கீட்டையும், நம்பிக்கையும் உங்களுக்கு ஏற்படுத்தி தரப்படும்.

இன்றும் ஒரு மாத கால முடிவில் வேலைகளை ஆரம்பிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரை வழங்கப்படும்.

இதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்திய – இலங்கை அரசு கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் தாம் மேற்கொள்ளவுள்ள உற்பத்தி தொடர்பாக முன்மொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

தொழில் ஆரம்பிக்கும் முயற்சியாளர்களுக்கு 30 வருட குத்தகை தரப்படும்.

அத்துடன் இலகு கடன் வசதி செய்து தரப்படும் என்றார்.

மேற்படி நிகழ்வில் பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி, லலித் வீரகுமார, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் வட மாகாண பணிப்பாளர் எஸ். சிவகங்காதரன், பணிப்பாளர், அமைச்சின் ஊடக பணிப்பாளர் இப்னூ அசுமத் மற்றும் கைத்தொழில் முதலீட் டாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக