18 நவம்பர், 2010

பொன்சேகாவுக்கு உடற்பயிற்சி இயந்திரம் வழங்க மேல் நீதிமன்றம் உத்தரவு



முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள உடற்பயிற்சி இயந்திரம் வழங்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் பொன்சேகா சுகயீனம் காரணமாக நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை என பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரனி தெரவித்துள்ளார். மேலும் பொன்சேகாவுக்கு உடற்பயிற்சி இயந்திரம் வழங்க வேண்டும் எனவும் அவர் சிறை வைக்கப்பட்டுள்ள கூண்டின் கூரைப் பகுதியை மீள் திருத்தம் செய்யும் படியும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து பொன்சேகாவுக்கு உடற்பயிற்சி இயந்திரம் வழங்குமாறும், கூரையை திருத்துமாறும் நீதவான் சிறைச்சலை ஆணையாளருக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் பின்னர், மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பிய பொன்சேகாவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக