17 நவம்பர், 2010

குழந்தையை மலக்குழிக்குள் வீசிய தாய் ஆஸ்பத்திரியில்

தான் பெற்றெடுத்துள்ள பச்சிளங் குழந்தையை மலசல குழிக்குள் தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள தாய் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் நேற்று (16) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிக குறுதிப் போக்குக் காரணமாகவே குறித்த தாய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடுமையான சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் குழந்தையொன்றை பிரசவித்து மலசல குளியொன்றினுள் தூக்கி வீசி விட்டு கடந்த 14ம் திகதி தன் கணவனுடன் மற்றும் ஏனைய தமது குழந்தைகளுடனும் இவர் தலைமறைவாகி உள்ளார்.

குறித்த தாய் நேற்று முன்தினம் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் சமயம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக