17 நவம்பர், 2010

முந்தலில் கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

பள்ளம வீதியில் அமைந்துள்ள முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவால ஹந்தி எனுமிடத்தில் விற்பனைக்கென எடுத்து வரப்பட்டதாகச் சொல்லப்படும் கஜமுத்துக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று யானைத் தந்தங்களில் இருந்து எடுக்கப்பட்ட கஜமுத்துக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக முந்தல் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இந்த கஜமுத்துக்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முந்தல் பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு பொலிசார் சென்ற போது அங்கிருந்த மேலும் மூவர் தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த வானும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ அலவத்தை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக