17 நவம்பர், 2010

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு 100 உழவு இயந்திரங்கள் விநியோகம்






யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நான்கு சக்கர உழவு இயந்திரங்கள் நூறு அடுத்த வாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் யாழ்ப்பாணத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிகழ்வின் போதே இவை விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாண விவசாயிகளின் நலன் கருதி இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளு க்கிணங்க இந்திய அரசாங்கம் ஐநூறு நான்கு சக்கர உழவு இயந்திரங்களை வழங்க வுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இவற்றில் கிடைக்கப்பெற்ற உழவு இயந்திரங்களில் 52 கடந்த வாரம் வவுனியா பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

எஞ்சிய உழவு இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக