17 நவம்பர், 2010

உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல : சபாநாயகர்

உள்ளூராட்சி மன்ற (விஷேட ஏற்பாடுகள்) மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களோ அவற்றின் எந்தவொரு சரத்துக்களோ அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்று உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

மேற்படி விடயங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இது தொடர்பில் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய பாராளுமன்ற அமர்வுகளின் ஆரம்பத்தில் சபாநாயகர் அறிவித்தல் நேரத்திலேயே சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதனை அறிவித்தார்.

அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஆற்றுப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற (விஷேட ஏற்பாடுகள்) மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்தம்) எனும் சட்ட மூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை 50 (2) (இ) எனும் நிலையியற் கட்டளையின் கீழ் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க விரும்புகிறேன். மேற்கூறப்பட்ட சட்ட மூலங்களோ அவற்றின் எந்தவொரு சரத்துக்களுமோ அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல வென்று அரசியலமைப்பின் 123 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக