17 நவம்பர், 2010

ஐக்கியத்தை கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும் பிரதமர்

சமாதான சூழலில் அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டு வரும் இவ் வேளையில் இலங்கையின் மத ஐக்கியம் மற்றும் அதற்கு தேவையான சமூக பின்புலத்தை கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று பிரதமர் தி. மு. ஜயரத்ன அவரது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியதாவது; சர்வமத ஐக்கியத்துக்கு ஊடாக நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பாகும்.எனவே இந்த ஹஜ்ஜுப் பெருநாளில் மத மற்றும் தேசிய ஒற்றுமை மூலம் நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதே நாம் செய்ய வேண்டியதாகும்.

வடக்கு மற்றும் கிழக்கில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக ஹஜ் பெருநாளை கொண்டாட இம் முறை வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டியதன் மூலமே அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டுள் ளது.

அனைத்து மதங்களிலும் கூறப்படும் மனிதாபிமானம், ஐக்கியம், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இஸ்லாம் மதத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணத்தின் மூலம் கூறப்படும் மத அனுஷ்டிப்பு ஒரு நாட்டின் முன்னேற்ற த்துக்கு உந்து சக்தியாக அமைகிறது என்று பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக