9 அக்டோபர், 2010

நடிக‌ர் எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் மரண‌ம்






அ.இ.அ.‌தி.மு.க. கொ‌ள்ளை பர‌ப்பு துணை செயல‌ர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரு‌க்கு வயது 69.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் என்ற கிராமத்தில் நடைபெ‌ற்ற பொதுக்கூட்ட‌த்‌தி‌ல் பே‌சி‌‌வி‌ட்டு நடிக‌ர் எஸ்.எஸ்.சந்திரன், நே‌ற்‌றிரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள விடுதியில் தங்கினார்.

நள்ளிரவு 1 மணி அளவில், எஸ்.எஸ்.சந்திரனின் உதவியாளர், மாத்திரை கொடுப்பதற்காக அவரை எழுப்பியுள்ளார். அப்போது அசைவற்று இருந்த எஸ்.எஸ்.சந்திரனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளர், கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.எஸ்.சந்திரனை அனுமதித்துள்ளனர்.

அங்கு எஸ்.எஸ்.சந்திரனை பரிசோதத்த மருத்துவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். எஸ்.எஸ்.சந்திரன் உடல் செ‌ன்னை கொண்டுவர ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்ட‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் அவரது ‌வீ‌ட்டி‌ல் பொதும‌க்க‌ள் அ‌ஞ்ச‌லி‌க்காக வை‌க்க‌ப்படு‌கிறது.

மா‌நில‌ங்களவை உறு‌ப்‌‌பினராக இரு‌ந்த எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் 100‌‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பட‌ங்‌க‌ளி‌ல் நடி‌த்து‌ள்ளா‌ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக