9 அக்டோபர், 2010

கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் தற்கொலை அதிகரிப்பு: பொலிஸார்




கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் இவ்வருடம் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 22 எனக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களுள் 17 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவர்.

தற்கொலை செய்து கொண்டவர்களுள் பெரும்பாலானோர் இளம் வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மிகச் சிறிய பிரச்சினைகளுக்காகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.பீ. தியகெலினாவல தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக