21 அக்டோபர், 2010

பேராதனை பல்கலை விஞ்ஞான பீடம் காலவரையின்றி மூடப்பட்டது


பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தை நேற்று (20) முதல் காலவரையின்றி மூடுவதற்கு பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள் ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் விஞ்ஞான பீட மாணவர்கள் சிலரை தாக்கிய போது மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட பலத்த காயத்தினால் பல்கலைக்கழகத்தில் அமைதியற்ற நிலையொன்று ஏற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிருவாகக் குழு மேற்கொண்டிருந்த முடிவினை யடுத்து குறித்த நிருவாகம் நேற்றுமாலை பல்கலைக்கழக உப வேந்தருடனான விசேட கலந்துரையாடலொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக