21 அக்டோபர், 2010

கல்முனையில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

சட்டவிரோதமாக கல்முனையில் இயங்கி வந்த ஒளிபரப்பு நிலையம் கல்முனை பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டது. இங்கு பெறுமதி மிக்க உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக இந்திய அலைவரிசையிலிருந்து மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த இந்த நிலையம் நற்பிட்டிமுனையில் இயங்கி வந்துள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் நிலையத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த இலத்திரனி யல் உபகரணங்களையும் கைப்பற்றி யுள்ளனர்.

இவ்வொளிபரப்பு நிலையம் ஊடாக விளம்பரங்கள் இடம்பெற்றதாகவும், இந்திய திரைப்படங்கள், நாடகங்கள் மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிலையத்தின் உரிமையாளரும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு ள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக