21 அக்டோபர், 2010

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் ஜனநாயகம் ரீதியான பிரதிநிதிதுவம் கிடைக்காது: ஜே.வி.ப

முறையான நிர்வாக முறைமையோ அல்லது ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவமோ உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறாதென நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கத் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத் திருத்தத்தில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதாகவும், இந்தத் திருத்தச் சட்ட மூலம் முழுக்க முழுக்க அரசியல் காரணிகளை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருத்தச் சட்டம் தொடர்பில் முழுமையாக விளங்கிக் கொள்ளாத சில மாகாணசபைகள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை எனவும் அரசாங்கம் தன்னிச்சையாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற்கு ஜே.வி.பி கட்சி ஆதரவளிக்கப்பட மாட்டாது என மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக