23 அக்டோபர், 2010

பணிகளுக்கு தடையாக உள்ள சில நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும்: மிருக வைத்தியர் சங்கம்

ஒரு நாள் பணி பகிஷ் கரிப்புப் போராட்டத்தை அடுத்து தமது நாளாந்தப் பணிகளுக்கு தடையாக உள்ள சில நடைமுறைகள் மாற்றப் பட வேண்டுமென மத்திய மாகாண மிருக வைத்தியர் சங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கையின் தேசிய உற்பத்தியில் விவசாயம் முக்கியமான ஒன்று. விவசாயத்துறையில் விலங்கு உற்பத்தி மிக முக்கியத்துவம் பெறுகின்றது. விலங்கு உற்பத்தித் துறையில் தகைமையாளர்களான மிருக வைத்தியர்கள் உள்ளனர். இவர்களது நாளாந்தப் பணிகளுக்கு தடையாக உள்ள சில நடைமுறைகள் மாற்றப் பட வேண்டுமென மத்திய மாகாண மிருக வைத்தியர் சங்கம் மேலும் தெரிவித்தது.

பேராதனையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்தாவது-

மத்திய மாகாண மிருக வைத்தியர் சங்கத் தலைவர் டாக்டர்.எஸ்.ஏ.சீலனாத்த, செயலாளர் டாக்கடர். பி.ஜி. விக்ரமசூரிய உற்பட சங்கத்தின் அங்கத்தவர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். அதில் அவர்கள்; மேலும் கூறியதாவது-

இலங்கையில் மிருக உற்பத்திகளாக பால். இறைச்சி, முட்டை, போன்றவற்றைக் குறிப்பிட முடியும். இதில் இன்று பாலில் தன்னிறைவு காண நாடு முயற்சிக்கிறது. ஆனால் மிருக வைத்தியர்களே இந்த விலங்கு வேலாண்மை அல்லது விலங்கு உற்பத்தித் துறையில் தகைமை பெற்றவர்களாகும். எனவே விலங்கு உற்பத்தில் எத்தகைய நுணுக்கங்களைக் கையாள வேண்டும் என்பதை மிருக வைத்தியர்கள் நன்கு அறிவர்.

விலங்கு களுக்கு வைத்தியம் செய்வது மட்டும் தான் எமது கடமை என நினைத்தால் அது தவறானதாகும். எமது கடமைகளுள் கிராம மக்களிடம் சென்று அவர்களது உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வழிவகைகளையும் வழிகாட்டல் களையும், ஆலோசனைகளையும் எடுத்துக் கூறுவதும் ஒன்றாகும். இது எமது வழமையான பணியாகும். அந்த வகையில் நாம் நாட்டின் தேசிய உற்பத்திக்கு அடிமட்டத்தில் மிகப் பயனுள்ள பணிகணைச் செய்த போதும் எமது பணிகளை மதிக்காமலும் அதன் பெறுமதியை உணராமலும் இருப்பவர்கள் மிக அதிகமாகும்.

பிரதேச செயலாளர் மூலம் எமது பணிகள் கட்டுப் படுது;தப் படுகின்றன. இன்று வறுமை ஒழிப்புப் போராட்டத்தில் சமுர்தி முக்கிய மான ஒன்றாகும். இருப்பினும் சமுர்தித் திட்த்தின் மூலம் விலங்கு உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப் படுகிறது. இதன்போது விலங்கு உற்பத்தித் துறை சாராத உயர் அதிகாரிகள் எமக்கு மேலாதிக்கம் செய்யமுற்படுவதனால் அமது பணியை சரிவர நிறைவேற்ற முடியாதுள்ளது. இதற்கு மாற்றீடாக மிருக வைத்தியம் தொடர்பாக சிறப்புத் தேர்ச்சி கொண்ட மிருக வைத்தியாகள் மூலம் அத்துறை நெறிப்படுத்தப் படுமாயின் பெறு பேறுகள் இன்னும் அதிகரிக்கும் என்றார்.

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து மிருக வைத்தியர்களும் (21)நேற்று சுகயீன போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு பணிப் பகிஸ்கரிப்புச் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக