23 அக்டோபர், 2010

ஆலய உற்சவத்தில் போதைப்பொருள் விற்பனை : இருவருக்கு சிறைத் தண்டனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் உள்ள ஆலய உற்சவம் ஒன்றின் போது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த இருவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி இராமக்கமலன் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி கோயில்போரதீவு பிரதேசத்தில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போதே போதைப் பொருட்களை விற்பனைசெய்த இருவரைக் கைதுசெய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.

கல்முனை தரவைக்கோவில் வீதியை சேர்ந்த முகம்மது சலாகுதீன் முகம்மது இர்ஸாத், நாகவில்லு, பலாரிய, புத்தளம் பகுதியைச் சேர்ந்த முகம்மது முசார் முகம்மது முபாரீஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்களிடம் இருந்து பாபுல் பக்கட்டுகள் உட்பட பல போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக