13 அக்டோபர், 2010

இலங்கைக்குக் கடல் அட்டை கடத்த முயன்ற இருவர் கீழக்கரையில் கைது

கீழக்கரை அருகே, இலங்கைக்குக் கடத்துவதற்காக, கடல் அட்டைகளைப் பதப்படுத்திய இருவரை, பொலிசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து கடத்தி வரப்பட்ட கடல் அட்டைகளை, இலங்கைக்கு கடத்துவதற்காக, கீழக்கரை அருகே வண்ணாங்குண்டில் பதப்படுத்தி வருவதாக, ராமநாதபுரம் கியூபிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், கென்னடி தலைமையில் பொலிசார், வண்ணாங்குண்டு மஹபூபா என்பவரது தோப்பில் சோதனை நடத்தினர். அங்கிருந்த மண்டபம் மீனவர்கள் அப்தாகீர்(48), அப்துல்லா(32) ஆகியோரை விசாரித்ததில், மண்டபத்தில் இருந்து கடல் அட்டைகளைக் கடத்தி வந்ததாகத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து 120 கிலோ கடல் அட்டை, பதப்படுத்தப் பயன்படுத்திய உபகரணங்களைப் பறிமுதல் செய்த பொலிசார், கீழக்கரை வன அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக