13 அக்டோபர், 2010

தாய்லாந்தில் இலங்கையர் கைது : கனேடியத் தமிழர் பேரவை கவலை

தாய்லாந்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட 155 இலங்கையரின் நிலை தொடர்பாக கனேடியத் தமிழர் பேரவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

இவர்கள் அனைவரும் அகதிளுக்கான சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்புத் தேவைப்படும் அகதிகள் என்றே நம்பப்படுகின்றது. மீண்டும் தங்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படின் அவர்கள் அங்கு துன்புறுத்தல்களுக்கு ஆளாகக் கூடும். இதே அச்சம் அவர்களுக்கும் உள்ளது.

இது ஐக்கிய நாடுகள் சபையின் வதைகளுக்கு எதிரான சட்டத்தின் பிரகாரம் கனடாவுக்கு உள்ள கடப்பாட்டை மீறுவதாக உள்ளது. இலங்கையில் போர் முடிவடைந்ததிலிருந்து பாதுகாப்புத் தேடி தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புகலிடம் கோரிய ஒரு நாடாக தாய்லாந்து இருந்து வந்தது. இவர்களில் கூடுதலான தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்தக் கைது தொடர்பான விபரங்கள் சரிவர வெளிவராத நிலையில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் ஒருவர் கனேடியத் தமிழர் பேரவையுடன் தொடர்பு கொண்டு, தாய்லாந்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தில் பதிவு செய்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.

"பன்னாட்டுப் பாதுகாப்பை வேண்டி நிற்கும் உண்மையான அகதிகளின் கைது தொடர்பான செய்தி எங்களுக்கு மிகவும் கவலை தருவதாக உள்ளது. இந்தக் கைதில் கனேடிய அரசாங்கத்தின் பங்கு இருக்குமாயின், நாம் மிகுந்த கவலையடைவோம் என்று குறிப்பிட்டார் கனேடியத் தமிழர் பேரவையின் தேசிய மட்டப் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை.

தாய்லாந்தில் கைது செய்யப்பட்டவர்கள் நியாயமாகவும், நீதியாகவும் நடத்தப்படுவதுடன் இலங்கைக்கு அனுப்பப்படுவதன் மூலம் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக் கூடும் என்பதனால் அவர்களுக்கு உரிய ஆதரவை வழங்குவதை உறுதி செய்வதற்காக பல்வேறு மனிதாபிமான நிறுவனங்களையும் கனேடியத் தமிழர் பேரவை தொடர்பு கொண்டுள்ளது.

கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள அகதிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் கனேடியத் தமிழர் பேரவை குரல் கொடுத்து வருகிறது.

மேலதிக விபரங்களுக்குஇ 416.240.0078 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக