13 அக்டோபர், 2010




காட்டுயானைகளால் பாதிக்கப் படு வோருக்கு நஷ்டஈடு வழங்கும் காப்புறுதி முறையொன்றையும், யானைகளுக்கான இயற்கை சரணாலயங்களை அறிமுகப்படு த்தும் திட்டமொன்றையும் வனவிலங்கு திணைக்களம் செயற்படுத்தவுள்ளது. இது தொடர்பான யோசனையொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கைகள் மூலம் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல் போக்குக்கு முடிவு கட்டப்படுமென்றும் இரு தரப்பும் சுமுகமாக அண்டியிருப்பதற்கான வழி ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

குறிப்பிட்ட காப்புறுதி திட்டம் மனிதர்கள், சொத்துக்கள் மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் அமையும். அத்துடன் யானைக ளுக்காக அமையவுள்ள இயற்கை சரணாலயங்கள், தற்போது லுனுகம்வெஹேரவில் உள்ளதைப் போல எல்லைகளை குறிப்பிடும் வகையிலும் அவற்றை பாதுகாக்கும் வகையிலும் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக