13 அக்டோபர், 2010

அபிவிருத்திப் பணிகளில் மக்களின் முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு







அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப் படும் அபிவிருத்திச் செயற்பாடுகளின்போது மக்களின் முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப் பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அபிவிருத்திச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தலில் தம்மை எவரும் எளிதில் ஏமாற்ற முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, தாம் இரண்டாவது தடவையாக மீளாய்வுக் கூட்டம் நடத்தும்போது அரை குறையாகவுள்ள சகல திட்டங்களும் நிறைவு செய்யப்பட்டு அதற்கான அறிக் கையையும் தமக்குச் சமர்ப்பிக்க வேண்டு மென அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

மாகாண ரீதியில் நடாத்தப்படும் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டங்களில் மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதுடன் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டுமென்ற எதிர்பார்ப்புடனுள்ளனர். மக்கள் எதிர்பார் ப்பை நிறைவேற்றுவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துதல் அவசியமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை எந்த நிறுவனம் அல்லது திணைக்களம் பொறுப்பேற்றிருந் தாலும் அவற்றைத் தாமதமின்றி மக்கள் உபயோகத்துக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட் டுக்கொண்ட ஜனாதிபதி, ஒரு நிறுவனத் தினால் அதனை நிறைவு செய்ய முடியாது போனால் பல நிறுவனங்கள் இணைந்து அவற்றை நிறைவு செய்ய முன்வரவேண்டும். எவ்வாறெனினும் மக்களுக்கான தேவைகளை துரிதமாகப் பெற்றுக் கொடுப்பதில் அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக