13 அக்டோபர், 2010

உலக முதற் பெண்களின் மாநாடு கோலாலம்பூரில் கோலாகல ஆரம்பம் இன்று ஷிரந்தி ராஜபக்ஷ உரையாற்றுகிறார்





உலக முதற் பெண்களின் மாநாடு மலேஷியாவின் தலைநகரான கோலாலம்பூரில் செரி பெரடானா மண்டபத்தில் மலேஷிய பிரதமர் ஸ்ரீமொஹம்மட் நஜீப் துன் அப்துல் றஷாக்கின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (11) ஆரம்பமாகியது.

22 நாடுகளின் முதற் பெண்மணிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் தெற்காசிய வலயத்தை இலங்கையின் முதற் பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ஷ பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இம்முறை மாநாடு, ‘இன்றைய சிறுவன் நாளைய தலைவன்’ என்ற தொனிப்பொருளில் அமைந்துள்ளது.

மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய மலேஷிய பிரதமர் ‘இன்றைய உலகம் எதிர்நோக்கியுள்ள பயங்கரவாதம், நிதி நெருக்கடி, எரிசக்தி பிரச்சினை, இயற்கை அழிவுகள், சிறுவர் மற்றும் பெண்கள் வன்முறை, உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு பெருமளவில் சிறுவர் மற்றும் பெண்களுக்கே முகம் கொடுக்கவேண்டியுள்ளது.

அவ்வாறான பிரச்சினைகளில் இருந்து சிறுவர் மற்றும் பெண்களை பாதுகாக்க உலக முதற் பெண்மணிகள் கைகோர்த்திருப்பது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்டார்.

இலங்கையின் முதற்பெண் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (13) மாநாட்டில் உரையாற்றுகிறார்.

சிறுவர் மேம்பாடு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பாராளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்க ஆகியோரும் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுடன் இந்த பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக