13 அக்டோபர், 2010

மீள்குடியேற்ற பகுதியில் மற்றொரு வயோதிபர் யானை தாக்கி பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய பகுதியான வவுணதீவில் மற்றொரு வயோதிபர் தனது உயிரை காட்டு யானைக்கு பலி கொடுத்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுணதீவு செலகப்பிரிவிற்குட்பட்ட காயங்காடு கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கனகசபை என்ற 70 வயது விவசாயியே யானை தாக்கியதில் கொல்லப்பட்டவராவார்.

இம்மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளில் கடந்த 3 தினங்களில் ஒரு பெண் உட்பட மூவர் யானைகளுக்கு தமது உயிரை தாரை வார்த்ததும் குறிப்படத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக