17 அக்டோபர், 2010

அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை – சம்பந்தன்

அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவினால் சம்பந்தன் அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சம்பந்தனுக்கு பதிலாக இளம் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அண்மைக்காலமாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் சம்பந்தன் பங்கேற்கவில்லை எனவும், உடல் நலக் குறைவினால் இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்சித் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உத்தேசம் கிடையாதென சிரேஸ்ட உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக