17 அக்டோபர், 2010

சன் சீ கப்பல்: கனடா வந்த தமிழ் அகதி குழந்தைகளுக்கு கல்வி போதிக்க விசேட ஏற்பாடு

சன் சீ கப்பல் மூலம் கனடா வந்தடைந்த தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதற்கான விசேட நடவடிக் கைகளை கனேடிய அரசாங்கம் மேற்கொண் டுள்ளது. அதற்கென மூன்று விசேட போதனா சிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சன் சீ கப்பல் மூலம் கனடா சென்றடைந்த தமிழ் அகதிகளில் தனியாக இருந்த பெண் களும் ஆண்களும் சகல வசதிகளும் கொண்ட தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு தொடர்ச் சியாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆயினும் குழந்தைகள் மற்றும் சிறு வர்கள் தாய்மாருடன் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தாய்மாருடன் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வி தொடர்பில் கனேடிய கல்வி அமைச்சு விசேட ஏற்பாடொன்றை மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம் குறித்த சிறுவர்களின் வயது வரம்பைப் பொறுத்து அவர்களுக்குத் தனித்தனியான வகுப்புகளை ஒழுங்கு செய்து கல்வி போதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக