17 அக்டோபர், 2010

பஸ் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து: யாழ். கைதடியில் ஒருவர் பலி

யாழ். கைதடி பகுதியில் நேற்று சனிக் கிழமை காலை 7.30 மணியளவில் பஸ் வண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை க்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸணும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவ்விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மன்னார் பண்ணையைச் சேர்ந்த இரண்டு பிள்ளை களின் தந்தையான பாலசந்திரன் ஜெயபா லன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக