17 அக்டோபர், 2010

யுத்தத்தின் போது கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்வாதார உதவி

யுத்தத்தின் போது கணவனை இழந்து மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மன்னார் சகவாழ்வு மன்றம் (க.உ.ந) தொடர்ந்தும் வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருவதாக அதன் இணைப்பாளர் எப்.எம். டியுட்டர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கோழி வளர்த்தல், வீட்டுத் தோட்டம், தையல் போன்ற வேளைத் திட்டத்திற்காக 35,000 ரூபாய் பெருமதிவாய்ந்த பொருட்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாகவும் இதற்கு அக்கிராமங்களைச் சேர்ந்த கிராம அலுவலர்கள் உதவி புரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக