22 அக்டோபர், 2010

அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டங் களை நடத்தி வருவதாக தகவல்





ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் வங்குரோத்து அரசியல் சக்திகள் மறைமுகமாகச் செயற்படுவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நாரஹேன்பிடியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் இங்கு மேலும் தகவல் தருகையில் :- அரசியலில் தோல்வி கண்ட சக்திகள் அப்பாவி மாணவர்களைப் பலிக்கடாக்களாக்கி தமது இலக்குகளை அடைந்து கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் அவர்கள் கண்ணீர் வடித்து கவலைகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

மாணவர் விடுதிகளில் மாணவர்கள் அல்லாத வெளி நபர்கள் பலர் தங்கியிருந்துள்ளமையை புலனாய்வுத் துறையினர் கண்டு பிடித்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற கூறமுடியாத பல தகவல்கள் உள்ளன. விசாரணையின் இறுதியில் தெரியவரும் என்றார்.

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுதல், மாணவக் குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெறுதல் போன்ற இங்கு மாத்திரமல்ல உலகின் பல நாடுகளில் நடைபெறும் ஒரு விடயமாகும். ஆனால் எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் ஒரு வரையறை உண்டு என்றும், அரச சொத்துக்களை சேதப்படுத்துவது, உப வேந்தர்களை தாக்க முற்படுதல், அமைச்சுக்களை, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவை முற்றுகையிடுதல் போன்ற செயற்பாடுகள் உகந்ததல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக