22 அக்டோபர், 2010

மத்திய கிழக்கு நாடுகளில் நிர்கதியான பணியாளர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டு

மத்திய கிழக்கு நாடுகளில் நிர்கதி நிலைக்குள்ளாகி உள்ளவர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டுக்களை வழங்கி அவர்களுக்கு சகாயம் வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த அனேக பணிப் பெண்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.

எசமானர்களால் அநீதி இழைக்கப் பட்டவர்களும் முகவர்களால் கைவிடப் பட்டவர்களும் அல்லது தப்பி வரமுடியாது அல்லல் கபவோர் எனப் பலதரப்பினர் உள்ளனர்.

இதற்கு முன்னர் இவ்வாறானவர்களுக்கு கடிதங்கள் மற்றும் ஆவணங்களை வழங்கியே அவர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். புதிய நடைமுறையின் படி தமது தற்காலிக கடவுச் சீட்டு மூலம் நாடு திரும்ப வழி பிறக்கு என எதிர் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக