20 அக்டோபர், 2010

உள்ளூராட்சி மன்றங்கள் சட்ட மூலம்; மத்திய மாகாண சபையில், ஏகமனதான இணக்கம்



உள்ளூராட்சி நிறுவனங்கள் சட்ட மூலம் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தேர்தல் சட்ட மூலங்களுக்கு மத்திய மாகாண சபை நேற்று ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை பள்ளேகல மாகாண சபை மண்டபத்தில் சபைத் தலைவர் சாலிய திசாநயாக்க தலைமையில் நடைபெற்றது.

உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலத்துக்கு மத்திய மாகாண சபையின் இணக்கத்தைப் பெறுவதற்காக பாராளுமன்றத்திலிருந்து முதலமைச்சருக்கு சட்ட மூலப் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அவசரமாக இச்சபையில் அதனை சமர்ப்பிப்பது பற்றி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்த போதும் இறுதியில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு ஒரு மணியளவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

பின்னர் ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக