20 அக்டோபர், 2010

சிதறிக் கிடக்கும் புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுகளில் முயற்சி ‘எல். ரி. ரி. ஈ. தலைதூக்குவது தடுக்கப்படும்’ - அவசரகால நீடிப்பு பிரேரணை மீது பி



தலைமைத்துவமின்றி சிதறிக் கிடக்கும் புலிகளின் புலனாய்வு மற்றும் ஆயுதப் பிரிவு உறுப்பினர்களை பலப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சி செய்யப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறுந்தகவல் (எஸ். எம். எஸ்) ஊடாகவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறினார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-30 வருட கால யுத்தம் முடிவடைந் துள்ள நிலையில் நாட்டில் அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை உறுதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும்.

மனிதாபிமான நடவடிக்கை மூலம் புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. மக்களின் உள்ளங்களை மாற்றவும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும் மற்றொரு மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. மீண்டுமொரு யுத்தம் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இன்று வரை 4485 முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

ஈழ நாடொன்றை அமைக்க உள்நாட் டிலும் வெளிநாட்டிலும் மீண்டும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளு க்குச் சென்று மீண்டும் இலங்கைக்கு வரும் புலிகளையும் யுத்த காலத்தில் தென்பகுதியில் மறைந்திருந்து மீண்டும் வடக்கிற்கு வரும் நபர்கள் குறித்தும் விசாரணை செய்வதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைமைத்துவமின்றி மறைந்து இருக்கும் புலனாய்வு மற்றும் ஆயுதப் பிரிவு புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுக ளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எஸ். எம். எஸ். குறுந்தகவலினூடாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. புலிகளுக்கு சார்பாக வெப் தளங்களினூடாகவும் சிதறியுள்ள புலிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்யப்படுகிறது-

நோர்வேயில் உள்ள நெடியவனும் அமெரிக்காவில் உள்ள வி. ருத்ரகுமாரனும் புலிகளை பலப்படுத்த வெளிநாட்டில் இருந்து முயற்சி செய்கின்றனர். இது தவிர கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகளின் இரு தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் என்பன மீட் கப்பட்டன. சர்வதேச மட்டத்தில் புலிகள் தலைதூக்குவதை தடுக்கவும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக