19 செப்டம்பர், 2010

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பிவைப்பு



கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர்களி;ல் 19 பேர் மேலதிக சிகிச்சைக்காக இன்று 3.40 மணியளவில் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கொள்ளுர மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உப்புல் சோமசிங்க ஆகியோர் முன்னிலையில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அம்பியுளன்ஸ் வண்டி மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை ஆகிய பொலிஸ் நிலையங்களின் அம்பியுலன்ஸ் வண்டிகளும் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்திய சாலைகளின் அம்பியுலன்ஸ் வண்டிகளிலும் இவர்கள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக இதன்போது அனுப்பிவைக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கொள்ளுர தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக