19 செப்டம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளுக்கு பி.பி.சிக்கு அனுமதி மறுப்பு

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளுக்கு பி.பி.சி சேவையை அனுமதிக்க மாட்டோம் என பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் வாழ்ந்த பொதுமக்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அத்தாட்சிகளை சமர்ப்பிப்பதற்கு 3 நாள் அமர்வு நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. மேற்படி பொதுமக்கள் சாட்சியமளிக்கும் இவ் அமர்வுகளுக்கு பாதுகாப்பு அமைச்சு பி.பி.சியை தடை விதித்துள்ளது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இவ்வார அமர்வுகள் கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக