19 செப்டம்பர், 2010

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு 728 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு:பசில் ராஜபக்ஷ

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 728 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதாக பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ச புத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தியில் மின்சாரம்,உட்கட்டமைப்பு வசதிகள்,மற்றும் உல்லாசப்பயணத்துறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கே இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக விவசாய துறைக்கான குளம்,நீர்ப்பாசன திட்டங்களுக்காக இதில் 378 மில்லியன் செலவிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக