19 செப்டம்பர், 2010

ஜெனீவா நாடாளுமன்ற சங்கத்தின் மனித உரிமைக்குழு முன் ஜயலத் சாட்சியமளிப்பார்.

அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் மனித உரிமைக்குழு முன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன சாட்சியமளிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேக்கா சார்பாக டாக்டர் ஜயலத் ஜயவர்தனவை சாட்சியமளிக்க சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் அன்டரின் ஜோன்ஸன் அழைத்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக