22 ஆகஸ்ட், 2010

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய தேர்த் திருவிழா




வரலாற்றுப் புகழ் மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று பகல் 9.30 மணிக்கு இடம் பெற்றது அதிகாலை முதல் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தேரில் ஆரோகணித்த துர்க்கையம்மன் அடியவர்களின் அரோகரா ஒலியுடன் தேரில் ஏறி வெளி வீதியுலா வரும் நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வில் யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இரந்தும் வருகை தந்த சுமார் பத்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட அடியவாகள் கலந்து கொண்டார்கள.கடநத கால சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட அடியவாகள் பறவைக்காவடி தூக்குக் காவடி கற்பூரச்சட்டி காவடிகள் எடுத்து தமது நேர்திகளை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அடியவர்கள் ஆலயத்திற்க்கு கூடி தமது நேர்திகளை நிறைவேற்றியதுடன் தூர இடங்களில் இருந்து வருகை தந்தவாகள் உட்பட பெரும் எண்ணிக்கையான அடியவாகள் அன்னதான மடத்தில் அன்னதானம் அருந்தி சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக