22 ஆகஸ்ட், 2010

மன்னார் மாவட்ட அபிவிருத்தி கூட்டம் இன்று நடைபெற்றது


மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அதிபர் நிக்கொளாஸ் பிள்ளையின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் றிஸாட் பதியூதின், கல்வித்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் மில் ரோய் பெனாண்டோ,வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி இராணுவ,கடற்படை பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

இதன் போது மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதி வெடிகளை அகற்றுதல்,மீள்குடியேற்றம்,அபிவிருத்தி,கல்வி,சுகாதாரம்,
மருத்துவம்,
போக்குவ்ரத்து போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக