29 ஆகஸ்ட், 2010

இந்தோனேசியாவில் எரிமலைக் குமுறல்

இந்தோனேசியாவின் தீவுப் பகுதியான சுமாத்ராவில் உள்ள எரிமலைக்குழம்பிலிருந்து பெருமளவிலான அக்கினிக் குழம்புகள் வெளியேறுவதன் காரணமாக 1000 இற்கும் அதிகமான இந்தோனேசிய மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

‘சினபங் என்ற இவ் எரிமலை 1,500 மீற்றர் உயரத்திற்கு நேற்று நடுநிசியில் வெடித்துள்ளது.400 வருடங்களுக்கு பிறகே சினபங் எரிமலை வெடித்துள்ளது’ என இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ முகவர்நிலையம் தெரிவித்தது.

தேசிய அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் இது குறித்து தெரிவிக்கையில்,

‘ எரிமலை வெடிப்பு முன்னெச்சரிக்கை அளவானது அதிகரித்தவண்ணம் உள்ளது. எரிமலையிலிருந்து வெளியேறும் புகையின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலை ஆபத்தானதாக உள்ளது’ எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக