29 ஆகஸ்ட், 2010

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நாளை இலங்கை விஜயம்

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுவரும் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அவர் இலங்கை வரவுள்ளார்.

இவரது விஜயத்தை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக