9 ஆகஸ்ட், 2010

ஆதிவாசி பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்: செல்போனில் படம் எடுத்து பரப்பினர்






மேற்கு வங்காளம் மாநிலம் சூரி பகுதியில் செல்போனில் ஆபாச படம் ஒன்று பரவியது. அதில் 17 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். ஆண்கள் அவரை கண்ட இடங்களில் தொட்டு மானபங்கப்படுத்துகின்றனர்.

சிறுவர்கள் அவர் மீது கல் வீசி தாக்குகின்றனர். அந்த பெண் அழுது கொண்டே முகத்தை கைகளால் மூடிய படி வருகிறார். அவர் நடக்க முடியாமல் தள்ளாடிய போதெல்லாம் பிரம்பால் அடிக்கின்றனர். இந்த காட்சி 11 நிமிடம் ஓடுகிறது. வயல்வெளி மற்றும் தெருக்கள் வழியாக அவரை அழைத்து வருவது போல காட்சி இருந்தது. 100 பேர் அவரை பின் தொடர்ந்து ஊர்வலமாக வந்தனர்.

எந்த ஊரில் இந்த சம்பவம் நடந்தது? என்று யாருக்கும் தெரியவில்லை. நிருபர்கள் சிலரின் செல்போனுக்கும் இந்த வீடியோ காட்சி வந்தது.

அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிமா யூன் ஹபிக், மாவட்ட கலெக்டர் சுமித்ரா ஆகியோர் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இது பற்றி அவர்கள் விசாரணை நடத்த உத்தர விட்டனர். வீடியோவில் உள்ள காட்சிகளை வைத்து அது எந்த ஊர் என கண்டு பிடிக்கும் பணி நடந்தது.

அதில் ராம்புத்காத் பகுதியில் உள்ள சில கிரா மங்கள் போல காட்சி இருந்தது. எனவே அந்த கிராமங்களில் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரித்தனர்.

அதில் ஒரு ஊரில் இந்த சம்பவம் நடந்ததை கண்டு பிடித்தனர். நிர்வாண ஊர்வலம் நடத்தியதாக 5 பேரை கைது செய்தனர்.

ஆனாலும் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட பெண்ணை இன்னும் அடையாளம் காணவில்லை. அவரை கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது.

எதற்காக அவரை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தினார்கள்? பஞ்சாயத்து தீர்ப்பால் இது நடத்தப்பட்டதா? என்று விசாரணை நடக்கிறது.

இந்த சம்பவம் 4 மாதங்களுக்கு முன்பு நடந்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காத தால் விஷயம் வெளியே தெரியாமல் இருந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக