9 ஆகஸ்ட், 2010

நோர்வேயில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூவர் தமிழர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வே தமிழீழ கௌன்சிலின் உறுப்பினர்களுக்கும் நோர்வே தமிழ் பொருளாதார பிரிவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் தொடர்பாக எழுந்த கருத்து முரண்பாடே மோதலுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மோதலில் நோர்வே தமிழ் பொருளாதார கழகத்தின் உறுப்பினர் சிவகணேஸ் வடிவேலு காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
.
.
.
.
.
.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக